கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில்18 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில் நேற்று(07) இடம்பெற்ற தேசியமட்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில்,
குருநாகல் மலியதேவ பெண்கள் மகளிர் கல்லூரியை எதிர்கொண்ட தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் பெண்கள் அணி 2 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டித் தேசியமட்டச் சம்பியன் ஆகியுள்ளது.
குறித்த தொடரின் சிறந்த வீராங்கனையாக மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த ஆன் திவிஸ்சனாவும், சிறந்த கோல் காப்பாளராக அதே கல்லூரியைச் சேர்ந்த வ.சாளினியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

உணவு ஒவ்வாமையால் 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் தொடர்பாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை!
கொழும்பு – காலிமுகத்திடல் நீராடிய மாணவர்களில் ஒருவர் பலி: இன்னொருவர் மாயம்!