யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற திருவிழா இன்று (13) அதிகாலை 1:45 மணியளவில் இடம்பெற்றது.
செல்வச் சன்நிதியான் கொடியேற்றத்தை காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.



திருவிழாவிற்கு வருகை தருகின்ற அடியவர்களின் நலன் கருதி சுகாதார, குடிநீர் உட்பட்ட வசதிகளை வல்வெட்டித்துறை நகர சபை மேற்கொண்டுள்ளதோடு விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.



இதேவேளை, தேர் திருவிழா எதிர்வரும் 27 ம் திகதியும், தீர்த்த திருவிழா 28 ஆம் திகதியும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி: மேலும் ஒருவர் வைத்தியசாலையில்!
செம்மணி மனிதப் புதைகுழி 544 எலும்புக்கூடுகள் அடையாளம் 530 முழுமையாக அகழ்ந்தெடுப்பு!
கீரிமலையில் பிதிர்கடன் செலுத்திய மக்கள்!
இலங்கையில் டெங்கால் 90 ஆயிரத்து 306 பேர் பாதிப்பு!