எரிபொருளின் விலைகள் நேற்று(31) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 407 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு 478 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், ஒக்டேன் 92 ரக பெற்றோல், 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 434 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 495 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
மண்ணெண்ணெய் 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 285 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க டொடரின் மதிப்பு மீண்டும் உயர்வு!
காணிகளை விடுவிக்கக்கோரி மயிலிட்டி மக்கள் ஏழாவது வெள்ளியாகவும் போராட்டம்!
கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவரின் 300 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துகளை முடக்க மேல் நீதிமன்றம் உத்தரவு!
சுகாதார தொண்டர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக போராட்டம்!