அதிகரிக்கப்பட்டுள்ள புதிய போருந்துக் கட்டணப் பட்டியலை பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் பேருந்துகளுக்குள் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனை மீறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயணிகள் சேவை அனுமதிப்பத்திர நிபந்தனை 16 (A) இன் படி, கட்டணப் பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயமாகும்.
இதனைப் பின்பற்றத் தவறும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
அதனை மீறிச் செயற்படுவோரின் பேருந்து அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும்,என தெரிவிக்கப்பட்டுள்ளது
பேருந்துக் கட்டணங்கள் கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் யவகையில் 12.19 வீதத்தால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூதூர் தன்னார்வ தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
தரமற்ற தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
செம்மணி மனிதப் புதைகுழியில் 515 எலும்புக்கூடுகள் அடையாளம்; 506 அகழ்ந்தெடுப்பு!
கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!