இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான பொடி லெசி, காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க, இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
மும்பையில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவையின் யுல்.எல் 142 விமான ம் ஊடாக பொடி லெசி, இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
முன்னர், நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பொடி லெசி, 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.

மூதூர் தன்னார்வ தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
தரமற்ற தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
செம்மணி மனிதப் புதைகுழியில் 515 எலும்புக்கூடுகள் அடையாளம்; 506 அகழ்ந்தெடுப்பு!
கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!