விளையாட்டுப் பொருட்களுக்குள் மறைத்து வைத்து கொரியர் சேவை ஊடாக சூட்சும்மாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அம்பாறை கல்முனை புறநகர் பகுதியில் நேற்று மாலை (08) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரியர் சேவை ஊடாக அனுப்பப்பட்ட விளையாட்டுப் பொருட்களுள் கரடி பொம்மையினுள் மறைத்து வைத்து 107 கிராம் ஐஸ் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று(09) ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

மூதூர் தன்னார்வ தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
தரமற்ற தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
செம்மணி மனிதப் புதைகுழியில் 515 எலும்புக்கூடுகள் அடையாளம்; 506 அகழ்ந்தெடுப்பு!
கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!