மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று(16) ஈடுபட்டிருந்தனர்.
தலங்கம பகுதியில் நேற்று முன்தினம்(14) சட்டத்தரணி ஒருவரும் அவரின் மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.


அந்தச் சம்பவத்தை கண்டித்தும், துப்பாக்கிதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுமே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூதூர் தன்னார்வ தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
தரமற்ற தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
செம்மணி மனிதப் புதைகுழியில் 515 எலும்புக்கூடுகள் அடையாளம்; 506 அகழ்ந்தெடுப்பு!
கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!