முச்சக்கரவண்டி மீது மரம் வீழ்ந்ததில் மாணவன் உட்பட மூவர் பலி!

கண்டி- நாவலப்பிட்டி பகுதியில் முச்சக்கர வண்டி மீது மரம் வீழ்ந்ததில் மாணவன் உட்பட மூவர் உயிரிந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது.

மபாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, பெரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் பாடசாலை சென்று கொண்டிருந்த மாணவன் ஒருவர் உட்பட இரண்டு பெண்களுமாக மூவர் உயிரிழந்துள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version