முத்தரப்பு தொடருக்காக இலங்கை வந்த இந்திய அணி!

இலங்கையில் இடம்பெறவுள்ள முத்தரப்பு தொடருக்கான இந்திய இந்தியா ‘A’ அணி இலங்கை வந்தடைந்துள்ளது.

இலங்கை ‘A’, இந்தியா ‘A’ மற்றும் ஆப்கானிஸ்தான் ‘A’ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ‘A அணித் தொடருக்காக, இந்திய குழாமானது திலக் வர்மா தலைமையில் களமிறங்கவுள்ளது.

இந்த அணியில் நடப்பு ஐ.பி.எல் போட்டியில் சிறந்த துடுப்படுத்தாட்ட வீரர் விருது வென்ற வைபவ் சூரியசன்ஷி இடம்பெற்றுள்ளார்.

இந்த முத்தரப்பு போட்டிகள் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், ஜூன் 9ஆம் திகதி முதல் ஜூன் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இந்த ஒருநாள் முத்தரப்பு தொடர் முடிவடைந்ததும், ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான இரண்டு, நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் காலியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version