சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த முன்னாள் தமிழ் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதோடு, அவரது சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த முன்னாள் பொலிஸ் தமிழ் உத்தியோகத்தர், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாக பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இருந்தும் சட்டவிரோத மணல் அகழ்வில் குறித்த நபர் தொடர்ந்தும் ஈடுபட்டுவந்துள்ளார்.
இந்தநிலையில் பருத்தித்துறை கற்கோவளத்தில் அகழ்ந்த மண்ணை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று (05) இடைமறித்தனர்.
பொலிஸாரின் சமிக்ஞையையும் பொருட்படுத்தாது சாரதி டிப்பரை ஓட்டுச் சென்றுள்ளார்.
அதனால் வாகனத்தை விரட்டிச் சென்ற பொலிஸார், சாவகச்சேரி நவற்குழி பகுதியில் வைத்து டிப்பரைக் கைப்பற்றியதோடு, சாரதியையும் கைது செய்துள்ளனர்.

மூதூர் தன்னார்வ தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
தரமற்ற தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
செம்மணி மனிதப் புதைகுழியில் 515 எலும்புக்கூடுகள் அடையாளம்; 506 அகழ்ந்தெடுப்பு!
கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!