யாழ்ப்பாணம், கொழும்புதுறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடல் அட்டை பிடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்த 4111 கடல் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் நேற்று(03) மாலை 6:40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


கடற்படையினர் மற்றும் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
கைதான இருவரும் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் ஊடாக யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!