யாழ். நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையின் பிக்கு ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி ஒருவர், விகாரை வளாகத்தில் வடிகட்டிய குடிநீர் பெறுவதற்காக நேற்றைய தினம்(29) விகாரைக்குச் சென்றுள்ளார்.

இதன்போது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமியின் தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரிப் பொலிஸார், குறித்த பிக்குவை கைது செய்து நேற்றைய தினம் சாவகச்சேரி நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
இதன்போது சந்தேக நபரை எதிர்வரும் 02 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கவும், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!