யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கும், சுற்றுலாவிகளுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் யாழ் பொலிஸாரின் உதவியுடன் இன்று(10)
வெளியேற்றபட்டனர்.



யாழ் நகரப்பகுதி, யாழ் கோட்டைச் சுற்றுவட்டம், பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி மற்றும் போதனா வைத்தியசாலை சூழல் ஆகிய இடங்களில் இருந்தவர்களே இவ்வாறு அகற்றப்பட்டனர்.
வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகமும், யாழ்.தலைமையக பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட யாசகர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!