யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கும், சுற்றுலாவிகளுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் யாழ் பொலிஸாரின் உதவியுடன் இன்று(10)
வெளியேற்றபட்டனர்.



யாழ் நகரப்பகுதி, யாழ் கோட்டைச் சுற்றுவட்டம், பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி மற்றும் போதனா வைத்தியசாலை சூழல் ஆகிய இடங்களில் இருந்தவர்களே இவ்வாறு அகற்றப்பட்டனர்.
வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகமும், யாழ்.தலைமையக பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட யாசகர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் கலந்துரையாடல்!
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய கனேடியர் கைது!
அமெரிக்காவின் 10 சதவீத வரிவிதிப்பை வரவேற்றுள்ள இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம்!
செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!