யாழில் போதை மாத்திரைகளோடு இளைஞர்கள் ஐவர் கைது!

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரைகளோடு இளைஞர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம்(25) குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 57 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version