யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டுவரும் சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி, எதிர்வரும் மார்ச் மாதம் 25 ஆம் திகதி முதல் துணைவேந்தர் ஆக நியமனம் பெறுகிறார்.
அண்மையில் இடம்பெற்ற துணைவேந்தருக்கான தேர்தலில் அதிக புள்ளிகளை பெற்று முதன்மை நிலையை பேராசிரியர் வேல்நம்பி பெற்றிருந்தார்.
அத்தோடு துணைவேந்தர் தேர்தலில் கடந்த மூன்று தடவைகள் முதல் மூன்று இடங்களுக்குள் அவர் தெரிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!