யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டித்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிக்கை ஒன்றினூடாக இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும், கோரிக்கைகளையும், ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்திவரும் பல்கலைக்கழக மாணவர்களின் மனோநிலையைப் புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும்.
மாறாக மாணவர்களின் உணர்வுகளை சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முயல்வது அரசாங்கத்தின் இனவாதம் சார்ந்த அணுகுமுறையாகும்.
மாணவர்களின் உணர்வுகளை மதிக்காத அரசாங்கத்தின் இவ்வாறான விசாரணை நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!