யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் வாகனமும் முதியவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.


இதன்போது நல்லையான் வீதி, சில்லாலையை சேர்ந்த 80 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து இளவாலை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!