யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு தேவையான ஆளணி வசதிகளை பெற்றுத்தருமாறுகோரி பிரதேச மக்கள் வைத்தியசாலை முன்பாக இன்று(21) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் போதியளவு கட்டடங்கள் காணப்பட்டபோதிலும், போதிய ஆளணி காணப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், வைத்தியசாலையில் வைத்தியர்கள் இருவர் கடமையாற்றுகின்றபோதிலும், தாதியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை.
வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டி காரைநகர் வைத்தியசாலைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்


கொழும்பு கடவத்தையில் விபத்து :ஒருவர் பலி!
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடல் !
ஈரான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளது: அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!
செம்மணி சிந்துபாத்தியிலிருந்து இதுவரை 412 என்புக் கூடுகள் அடையாளம்!