வன்னியின் கண்ணீர் அமைப்பால் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி கிராமத்திலுள்ள 37 குடும்பங்களுக்கு வன்னியின் கண்ணீர் அமைப்பால் பொங்கல் பொருட்கள் நேற்று (12) வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வு, பொற்பதி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அதிபர் சி.குகதாசன் தலைமையில், பொற்பதி கிராம அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது வன்னியின் கண்ணீர் அமைப்பு பிரதிநிதிகள், பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version