வேலையற்ற பட்டதாரிகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம்!

வேலையற்ற பட்டதாரிகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று (25) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்பு போட்டி பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும்,

வடமாகாணத்திலுள்ள வேலை வாய்ப்பு வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரியும்,

அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என கோரியுமே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமக்கான தீர்வுகள் கிடஐக்காவிடின் எதிர்காலத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் வேலையில்லா பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version