FIFA கால்பந்தாட்ட காலிறுதியில் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்!

FIFA உலகக் கிண்ண தொடரின் காலிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணியை வென்று அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

அமெரிக்க – போஸ்டன் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி இன்று (10) இடம்பெற்றது.

இதன்போது , பிரான்ஸ் அணி வீரர்களான கிலியன் எம்பாப்பே 60ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும்,

ஒஸ்மான் டெம்பேலே 66ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும் அடித்து வெற்றியை உறுதி செய்தனர்.

இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

மேலும், மொரோக்கோ அணியின் உலகக் கிண்ணப் பயணமும் நிறைவுக்கு வந்துள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version