IPL இரண்டாவது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று களத்தில்!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டி போட்டி இன்றிரவு(29) 7.30 மணியளவில் மும்பாய் வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இதேவேளை,
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டி,பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.

இந்தப்போட்டியில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியிருந்தன.

போட்டியில் நாணயச் வெற்றிபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி,
முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடெத்தாடிய
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை எடுத்திருந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 15.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்திருந்தது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version