IPL 4 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி!

பஞ்சாப் கிங்ஸ்க்கும்,ஹைதராபாத் ரைட்டன்ஸ்க்கும் இடையில் இடம் பெற்ற இந்தியன் பிரீமியர் லீக் 4ஆவது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்றிரவு(30) இடம்பெற்ற இந்த போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கு அமைய துடுப்படுத்தாடிய ஹைதராபாத் ரைட்டன்ஸ் அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 19.1 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அதற்கமைய இந்தியன் பிரீமியர் லீக் இன் 4ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version