இசைத் துறையில் மிளிரும் பிரியா ஜெர்சன்!

பிரியா ஜெர்சன்,விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்று தனது தனித்துவமான குரலால் நடுவர்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இறுதிச் சுற்றில் இரண்டாம் இடத்தை பிடித்து 10 லட்சம் ரூபா பரிசு தொகையை வென்றார்.

பிரியா 1995 இல் டிசம்பர் மாதம் கேராளாவில் பிறந்தார்.
மேற்கிந்திய செவ்வியல் இசையில் எட்டாம் நிலை வரை தேர்ச்சி பெற்றுள்ளார்.

பிரியா ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் நிகழ்வுகளிலும் பாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

பிரியா புஷ்பா 2,லைகர் மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற மலையாள திரைப்படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார்.

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கில்லாடி ஜோடி நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து பங்கேற்றி வருகின்றார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version