உலக சாதனை நிலைநாட்டி மண்ணுக்குப் பெருமை தேடித் தந்த இளம் பெண்!

15 நிமிடங்களுக்குள் திறமைகளை வெளிக்காட்டும், இலங்கை மகளிருக்கு விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆடை வடிவமைப்பாளரான யாழ் தென்மராட்சி கைதடியைச் சேர்ந்த மணியம் டஸ்னி 15 நிமிடத்தில் தைக்க வேண்டிய ஆடையை 10 நிமிடத்துக்குள் வெற்றிகரமாகத் தைத்து முடித்து வெற்றியீட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் அவரது சாதனை இடம்பிடித்துள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version