கேப்பாபிலவில் நிலமீட்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது!

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று கேப்பாப்பிலவு பகுதி மக்கள் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஆரம்பித்த போராட்டம் இன்றும்(29) தொடர்கிறது.

இராணுவத்தால் ஆக்கரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கேப்பாப்புலவில் 55 குடும்பங்களுக்குரிய 59.5 ஏக்கர் பூர்வீக காணிகளும், 4 குடும்பங்களுக்குரிய 100 ஏக்கர் காணிகளும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version