யாழ் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய சுகாதாரத் தொண்டர்கள், யாழ். போதன வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதாரத் தொண்டர்கள் இன்று (05) காலை 8:30 மணி முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.



சுகாதார உதவியாளர் நியமனத்தின் போது சுகாதாரத் தொண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சுகாதார அமைச்சர் வாக்குறுதி அளித்திருந்த போதிலும்,
தற்போது இடம் பெற்றுவரும் சுகாதார உதவியாளர் நேர்முக தேர்வில் தொண்டர்கள் அழைக்கப்படவில்லை எனத் தெரிவித்தே சுகாதாரத் தொண்டர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் போரட்ட இடத்திற்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாக கருணைநாதன் இளங்குமரன்,ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடினர்.




விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!