“தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் சுமந்திரனும், சிவஞானமுமே தவிர சிறிதரன் அல்ல” என சிவசேனை அமைப்பின் இலங்கைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று(26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துரைத்த அவர், 2025 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமிழரசுக் கட்சியிலிருந்து பலர் நீக்கப்பட்டுள்ளார்கள்.
மட்டக்களப்பில் அரியநேந்திரன், கொழும்பில் தவராசா, யாழ்ப்பாணத்தில் சரவணபவன், மானிப்பாயில் அனந்தி சசிதரன், மன்னாரில் சிவகரன் எனப் பட்டியல் நீள்கிறது.
மலட்டுத்தன்மை உடைய கட்சியாக தமிழரசுக் கட்சியை மாற்றுவதே சுமந்தனுடைய நோக்கமாக இருக்கிறது” – என்றார்.

மூதூர் தன்னார்வ தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
தரமற்ற தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
செம்மணி மனிதப் புதைகுழியில் 515 எலும்புக்கூடுகள் அடையாளம்; 506 அகழ்ந்தெடுப்பு!
கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!