நடுவானில் மோதிய உலங்கு வானூர்திகள்: அறுவர் பலி!

உலங்கு வானூர்திகள் இரண்டு நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் அறுவர் உயிரிழந்துள்ளனர்.

பிரேஸில் – ரியோ டி ஜெனிரோவின் மேற்குப் புறநகர்ப் பகுதியான ‘ரெக்ரியோ டோஸ் பண்டேராண்டஸ்’ என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நடுவானில் மோதிக்கொண்ட இரு உலங்கு வானூர்திகளும், அங்கிருந்த மின்சார கார் விற்பனை நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து நொறுங்கியுள்ளன.

இதனால் இரு உலங்கு வானூர்திகளிலும் இருந்த அறுவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் உலங்கு வானூர்திகள் விழுந்து நொறுங்கியதில் அங்கிருந்த 20 மின்சார கார்கள் வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்துள்ளன.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version