நயினாதீவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்த இந்திய தூதுவர்!

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் எச்.ஈ. சந்தோஷ் ஜா, யாழ்.நயினா தீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு இன்று (03) விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத் தூதர் சாய் முரளி மற்றும் தூதரக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version