நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர் திருவிழா நேற்று (28) சிறப்பாக இடம்பெற்றது.
வசந்த மண்டப பூசைகளை தொடர்ந்து அம்பாள் விநாயகப்பெருமன், முருகன் வள்ளி தெய்வானையோடு உள்வீதி வலம்வந்தார்.



பின்னர், விநாயகப் பெருமான் முதல் தேரில் வலம்வர, வள்ளி தெய்வானை சமேதராய் முருகப் பெருமான் இரண்டாவது தேரில் முன்னே செல்ல, நாகபூசணி அம்பாள் மூன்றாவது தேரில் வலம்வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.
பக்தர்கள் பாட்டுக்காவடி, பால்காவடி, தூக்குக்காவடி மற்றும் கற்பூரச்சட்டி, பாற்குடம் எடுத்து தமது நேத்திக்கடன்களை நிறைவு செய்தனர்.




இலங்கை – வியட்நாம் இடையே நேரடி விமான சேவைகள் எதிர்வரும் 16 முதல் ஆரம்பம்!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் நியமனம்!
யாழ்.கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவு தினம் இன்று!
தொண்டமனாறு செல்வ சந்நிதி முருகன் கொடியேற்றம்…!