நெடுந்தீவுக்கான அரச படகுச் சேவைகள் முற்றாகச் செயலிழந்துள்ளன.
நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையேயான சேவையில் ஈடுபடும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகளில், குமுதினி திருத்தவேலை காரணமாக சேவையில் ஈடுபடவில்லை.


வடதாரகை திருத்த வேலைக்காக திருகோணமலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நெடுந்தாரகை திருத்தவேலைக்காக நெடுந்தீவில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறிகட்டுவான் – நெடுந்தீவு இடையேயான அரச படகு சேவைகள், முற்றாக செயலிழந்துள்ளன.


இந்தநிலையில் தனியார் படகு சேவையான, கரிகணன் மட்டுமே தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளது.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!