நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய தினங்களில் மாத்திரம் 36 பாரதூரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணுப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, நேற்று முன்தினம் 19 விபத்துகளும், புத்தாண்டு தினமான நேற்றைய தினம் 17 விபத்துகளும் பதிவாகியுள்ளன.
மேலும், குறித்த இரண்டு நாட்களில் 35 வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதில், நேற்று முன்தினம் 14 மோதல்கள் பதிவாகியுள்ள நிலையில், நேற்று முதல் இன்று காலை வரை 21 மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!