இந்தியாவின் 77ஆவது குடியரசு தின நிகழ்வு யாழ்ப்பாணதிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று(26) காலையில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீசாய் முரளி, இந்திய தேசியக் கொடியேற்றி ஏற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.


தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்துச் செய்தியை துணைத்தூதுவர் வாசித்தார்.


அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் பலவும் நிகழ்வை அலங்கரித்தன.


1950 ஆம் ஆண்டு ஐனவரி 26 ஆம் திகதி இந்திய அரசியலமைப்பு அமலில் வந்ததை நினைவுகூரும் வகையில் இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!