FIFA உலக கிண்ண தொடரில் அரையிறுதிக்கு தெரிவாகியது இங்கிலாந்து அணி!

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில், நோர்வே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

போட்டியின் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்ததால், மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

அண்ட்ரியாஸ் ஷெல்டெரூப், 36-வது நிமிடத்தில் கோல் அடித்து நோர்வேயை முன்னிலைப்படுத்தினார்.

ஜூட் பெல்லிங்ஹாம் ஆட்டத்தின் முதல் பாதியின் இறுதியில் 44 ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், கூடுதல் நேரத்தின் ஆரம்பத்தில் 92-வது நிமிடத்தில் 2ஆவது கோலையும் அடித்தார்.

ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் நோர்வே வீரர் டோர்ஜோர்ன் ஹெக்ஜெம் அடித்த கோல், ஹாலண்ட் விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டதாக VAR மூலம் மறுக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version