இந்தியாவின் சிறந்த ஆடை வடிவமைப்பாளராக திகழ்ந்தவர் பானு அதையா ஆவார்.
பானு அதையா, 1983 இல் காந்தி படத்திற்காக ஒஸ்கார் விருதை வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமை பெற்றவர்.
குரு தத், ராஜ்கபூர் போன்ற இயக்குநர்களுடன் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக 100க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார்.

கோலாப்பூரில் பிறந்த இவர் மும்பையில் கலை பயின்று,ஆடை வடிவமைப்பில் புதிய உத்திகளை கையாண்டார்.
பானு அதையா,1929 ஆண்டு ஏப்ரல் 28 இல் கோலாப்பூரில் பிறந்தார்.பாம்பே புரோகிரசில் ஆர்ட்டிஸ்ட் குரூப்பில் இடம்பெற்ற ஒரே பெண் கலைஞராகவும் திகழ்ந்தார்.
குரு தத்தின் சி.ஐ.டி திரைப்படத்தின் மூலம் ஆடை வடிவமைப்பாளராக திரையுலகில் அறிமுகமானார்.

1982 இல் வெளியான காந்தி திரைப்படத்தின் மூலம் 1983 இல் ஆஸ்கார் விருது பெற்றார்.
வரலாற்றுப் படங்களுக்கு துல்லியமான உடைகளை வடிவமைப்பதில் வல்லவராக திகழ்ந்தார்.
“லகான்” படத்திற்காக குஜராத்தின் கிராமப்புற உடைகளை,காதி துணிகளை பயன்படுத்தி தத்ரூபமாக வடிவமைத்தார்.
பானு அதையா, 2020 ஒக்டோபர் 15 அன்று தனது 91 வயதில் காலமானார்.

ஈரான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளது: அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!
கத்தாரின் இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் விபத்து: 54 பேர் காயம்: 18 பேரை காணவில்லை!
லெபனான் எல்லையில் இருந்த பாதுகாப்பு தளர்த்தப்படும்: இஸ்ரேல் அறிவிப்பு!
ஈரானுக்கு 300 பில்லியன் டொலரை கொடுக்கும் ட்ரம்ப்: அமெரிக்காவில் வெடித்த அரசியல் சர்ச்சை!