
யாழ்.செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை மொத்தம் 412 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,
409 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், நேற்றைய(23) தினம் 19 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.


செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 32 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றதோடு,
நேற்றோடு அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மீண்டும் அகழ்வுப் பணிகள் ஜூலை மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us



