இலங்கை
Trending

மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சூழ அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தளர்வு!

மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

கெண்டலியத்த வீதி மேற்கு, கெண்டலியத்த வீதி வடக்கு, மற்றும் தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டமே தளர்த்தப்பட்டுள்ளது.

மஹர சிறைச்சாலையில் நேற்றைய தினம்(01) ஏற்பட்டிருந்த அமைதியின்மையை அடுத்து சிறை வளாகம் சோதப்பட்டு, தீயூட்டப்பட்டுமிருந்தது.

அதனையடுத்து குறித்த பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button