யாழ்ப்பாணம் நெடுந்தீவிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணாமல் போயிருந்த மீனவர் ஒருவரது சடலம் தமிழகம் நாகபட்டினத்தில் கரையொதுங்கியுள்ளது.
குறித்த மீனவர் அணிந்திருந்த உடைகளை வைத்து சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நெடுந்தீவு தாளைத்துறையை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய ஜேசுதாசன் ஆரோக்கிய அன்ரனீஸ் கடந்த 11 ஆம் திகதி கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.
இந்தநிலையில், தமிழகம் நாகபட்டினம் கடற்கரையில் குறித்த மீனவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
உரிய விசாரணைகளின் பின்னர் சடலத்தை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை – வியட்நாம் இடையே நேரடி விமான சேவைகள் எதிர்வரும் 16 முதல் ஆரம்பம்!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் நியமனம்!
யாழ்.கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவு தினம் இன்று!
தொண்டமனாறு செல்வ சந்நிதி முருகன் கொடியேற்றம்…!