
யாழ்.தையிட்டி விகாரையை புகைப்படம் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவருவம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மல்லாகம் நீதவான் நீதிமன்றம், சந்தேக நபர்களை பிணையில் விடுவித்துள்ளது.
சட்டத்தரணி மகிந்தன் கந்தசாமி பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகியிருந்தார்.
வெசாக் தினமான நேற்றைய தினம் தையிட்டி விகாரையை புகைப்படம் பிடித்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் பலாலி பொலிஸார் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us



