விளையாட்டு
Trending

FIFA உலகக் கிண்ண அரையிறுதிக்குள் நுழைந்ததுஅர்ஜென்டினா அணி!

FIFA உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டியில், அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

இந்த போட்டி அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டி ஸ்டேடியத்தில் நேற்று (12) நடைபெற்றது.

போட்டியில், அர்ஜென்டினா சிறப்பான விளையாட்டின் மூலம் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம், அர்ஜென்டினா அணி அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தப்போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை அற்லாண்டா ஸ்ரேடியத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும், மற்றைய அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன. இந்தப்போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை டல்லாஸ் ஸ்ரேடியத்தில் இடம்பெறவுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button