விளையாட்டு
Trending

FIFA உலகக் கிண்ண போட்டியில் எம்பாப்பே சாதனை!

FIFA உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் நொக்-அவுட் சுற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் கிலியன் எம்பாப்பே தன்வசப்படுத்தியுள்ளார்.

ஸ்வீடனுக்கு எதிரான போட்டியில், பெற்ற இரு கோல்கள் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் பிரான்ஸ் அணியின் தலைவர் கிலியன் எம்பாப்பே அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

இதன்மூலம் அதிக கோல்களை அடித்த வீரருக்கான ‘கோல்டன் பூட்’ போட்டியில் லியோனல் மெஸ்ஸிக்கு இணையாக கிலியன் எம்பாப்பே முன்னேறியுள்ளார்.

நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நேற்றிரவு FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி, ஸ்வீடனை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button