
யாழ் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய சுகாதாரத் தொண்டர்கள், யாழ். போதன வைத்தியசாலை முன்பாக இன்று (06) இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார உதவியாளர் நியமனத்தின் போது சுகாதாரத் தொண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சுகாதார அமைச்சர் வாக்குறுதி அளித்திருந்த போதிலும்,



இன்று ஆரம்பமாகும் சுகாதார உதவியாளர் நேர்முக தேர்வில் தொண்டர்கள் எனவும் அழைக்கப்படவில்லை எனத் தெரிவித்தே சுகாதாரத் தொண்டர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

Follow Us



