உலகம்
Trending

ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்க 24 வணிகக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கிய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணை ஊடாக 24 வணிகக் கப்பல்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் இந்த வணிகக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றுள்ளதாகவும்,

இந்தக் கப்பல்கள் அனைத்தும் ஈரானின் புரட்சிகர காவற்படையின் உரிய அனுமதி மற்றும் ஒருங்கிணைப்பைப் பெற்றே பயணித்துள்ளதாகவும் ஈரானின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை மீதான எமது நுணுக்கமான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முழு அதிகாரத்துடன் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

அத்துடன், பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பிராந்தியங்களில் தீய எண்ணம் கொண்ட வெளிநாட்டினருக்கு எவ்வித இடமும் இல்லை எனவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை குறிப்பிடப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button