
அமெரிக்கா நடாத்திய புதிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணையூடான கப்பல் போக்குவரத்துகள் முழுமையாக மூடப்படும் என ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் கடுமையான பாதுகாப்பற்ற சூழ்நிலையின் காரணமாக,
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் எண்ணெய் தாங்கிகள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் உட்பட அனைத்துக் கப்பல்களுக்கும் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த உத்தரவை மீறி நீரிணையை கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலாக இருந்தாலும் தாக்கப்படும் எனவும் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.

Follow Us



