
முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில்
கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் முகமாக அவுஸ்திரேலிய சிட்னி நகரில் ‘இன அழிப்பு நினைவுத் தூபி’ திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இதற்குரிய நிகழ்வு இன்று (16) காலையில் இடம்பெற்றுள்ளது.
சிட்னியிலுள்ள Pendle Hill Civic Park இல் இன்று(16) காலையில், இந்த நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது.


Cumberland நகர சபை முதல்வர், நினைவுத் தூபியை திறந்து வைத்துள்ளார்.
சிட்னிலிலுள்ள ‘தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னெடுப்பில், சிட்னியிலுள்ள அனைத்துத் தமிழர் அமைப்புகளின் ஒத்துழைப்போடும் இந்த “இன அழிப்பு நினைவுத்தூபி” அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us



