இலங்கை
Trending

பூநகரியில் காற்றாலை மற்றும் கனிம அகழ்விற்கு பொது அமைப்புகள் கண்டனம்: போராட்டத்துக்கும் அழைப்பு!

காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிம அகழ்வுகளால் பூநகரி பிரதேசம் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக கிரஞ்சி பொன்னாவெளி வலைப்பாடு ஆகிய பிரதேசங்களின் ஒன்றுபட்ட அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

பறிபோகும் எமது பிரதேசங்களின் இருப்பையும், மக்களின் வாழ்வையும் பாதுகாக்க எதிர்வரும் 28 ஆம் திகதி வேரவில் பிரதேச வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைப்பு அறிவித்துள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று(26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அந்த அமைப்பு இந்த அறிவித்தலை விடுத்தது.

தேசிய அபிவிருத்தி என்ற பெயரில் எமது பகுதியில் காற்றாலை மற்றும் கனிம அகழ்வு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கிராஞ்சி, பொன்னாவெளி, பாலாவி போன்ற எமது பிரதேசங்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படவுள்ளன.

இங்கு 34 காற்றாலை கம்பங்கள் நாட்டப்படவிருக்கம் நிலையில், 14 கம்பங்கள் மக்களின் தொழிலிடங்களில் அமையவுள்ளன.

இந்த பகுதியை கைவிட்டு விட்டு ஏனைய இடங்களில் மேற்கொள்ளுமாறு கோரிவருகின்றோம்” என கிரஞ்சி பொன்னாவெளி வலைப்பாடு ஆகிய பிரதேசங்களின் ஒன்றுபட்ட அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button