இலங்கை
Trending

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படைத் தளபதிக்கு நீதிமன்று அழைப்பாணை!

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளிலிருந்து 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டதாகக் வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, முன்னாள் கடற்படைத் தளபதியை எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 11 இளைஞர்கள் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையதாகும்.

வழக்கின் மேலதிக விசாரணைகளின் தொடர்ச்சியாகவே இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button